உள்நாடு

நுரைச்சோலை தேசிய பாடசாலையின் சாதனை மாணவிகள் கௌரவிப்பு

கடந்த மாதம் யாழ் சிதம்பரக் கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட கணிதப் போட்டியில் கலந்து கொண்ட நுரைச்சோலை தேசிய பாடசாலையின் மாணவிகளான ஆர். றஸா மனால் மற்றும் எம். ஹம்தா மனால் ஆகிய இரு மாணவிகள் வெண்களப்பதக்கம் வென்றிருந்தனர்.

அதற்கமைய இப்போட்டியில் வெண்களப்பதக்கம் வெற்றி கொண்டு பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்த இவ்விரு மாணவிகளையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (6) பாடசாலையின் அதிபர் தலைமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றதுடன், பாடசாலைச் சமூகமும், பெற்றார் அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் என்பன இம் மாணவிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


(எஸ்.முபீன் றிஸான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *