உள்நாடு

நாடெங்கும் நாளை நாமலின் விழிப்புணர்வு திட்டம்..!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் ”நாமலின் தொலைநோக்குத் திட்டம்” குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் நாளை (07) காலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள 22 தேர்தல் மாவட்டங்களில் 160 ஆசனங்களையும் 13,268 வாக்களிப்பு நிலையங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *