விளையாட்டு

ஆறுதல் வெற்றி பெறுமா இலங்கை; 3ஆவது டெஸ்ட்டில் இலங்கை களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியுள்ளது.

இன்றைய தினம் ஆரம்பிக்கும் 3ஆவது போட்டியில் இலங்கை அணி சார்பில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதற்கமைய ஆரம்பத்துடுப்பாட்ட வீரரான நிஷான் மதுஷ்க நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குசல் மெண்டிஸ் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். மேலும் சுழல்பந்துவீச்சாளரான பிரபாத் ஜெயசூரியவுக்கு பதிலான வேகப்பந்துவீச்சாளரான விஷ்வ பெர்ணான்டோ அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணி சார்பில் மெத்யூவ் பொட்ஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜோஷ் ஹுல் அணியில் இடம்பெற்றுள்ளார். மேலும் கடந்த 21ஆம் திகதி மென்செஸ்டரில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களினால் வெற்றியீட்டியது.

இரண்டாவது போட்டி கடந்த 29ஆம் திகதி லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து அணி 190 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் மூன்றாவதும்இ இறுதியுமான ஆட்டம் இன்று ஆரம்பமாகிறது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *