உள்நாடு

கட்டியாவ மோட்டார் சைக்கிள் விபத்தில் தாய் மகள் பலி குழந்தை படு காயம்

எப்பாவல கெக்கிராவ பீ 213 வீதியில் கட்டியாவ  சந்திக்கு அருகாமையிலுள்ள வளைவில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் செலுத்திய வான் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் (04) மாலை மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தாய் மற்றும் மகள் இருவரும் உயிரிழந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எப்பாவல பொலிசார் தெரிவித்தனர்.

கல்கமுவ போகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த என்.சந்திரலதா (58) வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் மற்றும் அவரின் மகள் இந்திராணி (38) வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயுமே உயிரிழந்துள்ளனர்.

எப்பாவளையில் இருந்து கெக்கிராவ பகுதிக்கு சார்ஜன்ட் செலுத்திய வான் கெக்கிராவ பகுதியிலிருந்து எப்பாவல பகுதிக்கு சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியிள்ளது.

விபத்தில் உயிரிழந்துள்ள மகளின் கணவர் இராணுவ சேவையில் பணியாற்றி வருவதுடன் எப்பாவல நல்லமுதாவ பகுதியில் அமைந்துள்ள பிரதான வீட்டுக்கு சென்று மீண்டும் கல்கமுவ நோக்கி பயணித்து கொண்டிருந்த போது  விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *