உள்நாடு

சிங்கள மொழி வலய மட்ட போட்டிகளில் அனுராதபுர சாஹிராவுக்கு முதலிடம்

நடைபெற்று முடிந்த சிங்கல தின வலய மட்ட போட்டிகளில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரியிலிருந்து பங்குபற்றிய 30 மாணவர்களினுள் 26 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இதில் 11 மாணவர்கள் தனி நிகழ்ச்சியில் முதலாம் இடத்தையும் 08 மாணவர்கள் குழு நிகழ்ச்சி ஒன்றில் 1 ஆம் இடத்தையும் 06 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் ஒரு மாணவர் மூன்றாம் இடத்தையும் பெற்று மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளனர்.

வலய மட்டத்தில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி முதலாம் இடத்தைப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவர்களை பயிற்று வித்த ஆசிரியர்களான கே.ரீ.சாந்தி லதா ,எம்.எம்.தஸ்லிமா டபிள்யூ பீ.பாத்திம உள்ளிட்ட குழுவினருக்கு பாடசாலை சமூகம் நன்றிகளை தெரிந்துள்ளனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *