உள்நாடு

கம்பளை எழுத்தாளர் அஸ்மா டீன் அவர்களின் “ஆலமரம்” சமூக நாவல் வெளியீடு..!

கம்பளை எழுத்தாளரும்,கவிஞரும்,கலைஞருமான அஸ்மா டீன் அவர்களின் சமூக நாவலான “ஆலமரம் “அண்மையில் கம்பளை ஸாஹிரா கல்லூரி மஹ்மூத் கேட்போர் கூடத்தில் விமர்சியாக வெளியீட்டு வைக்கப்பட்டது.
பேராசிரியர் எம். எஸ். என்.அனஸ் அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இவ் வெளியீட்டு விழாவில் விஷேட அதிதிகளாக  கலாபூஷணம் திருமதி நயீமா சித்தீக் அவர்களும்,பேராசிரியை கலாநிதி சாதியா ஸலாம் அவர்களும்,கலாபூஷணம் அரபா மன்சூர் அவர்களும் கலந்து சிறப்பித்ததோடு எழுத்தாளர்கள்,நலன் விரும்பிகள்,புத்தி ஜீவிகள் என பலரும் இதில்  கலந்து சிறப்பித்தனர். வானொலி அறிவிப்பாளர் சியாமுந்தீன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.சிறந்த  நாவலான இதனைப் பெற்று பயன் பெற விரும்புவோர் 0771126529 எனும் இலக்கத்தோடு தொடர்பு கொள்ளலாம்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *