உள்நாடு

பதவி நீக்கப்பட்ட நான்கு இராஜாங்க அமைச்சர்கள்..!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு இராஜாங்க அமைச்சர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர்களான பிரேமலால் ஜயசேகர (துறைமுக மற்றும் விமான சேவைகள்), இந்திக்க அனுருத்த (மின்சாரம் மற்றும் எரிசக்தி), மொஹான் பிரியதர்ஷன டி சில்வா (விவசாயம்) மற்றும் சிறிபால கம்லத் (நெடுஞ்சாலைகள்) ஆகியோர் இவ்வாறு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 47(3)(ஏ) பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி குறித்த இராஜாங்க அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *