உள்நாடு

கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கை ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில் வருடாந்த புனித “சுப்ஹான மௌலித்” மஜ்லிஸ் நிகழ்வுகள்..!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் புனித “ரபீஉனில் அவ்வல்” மாதத்தை முன்னிட்டு, “சுப்ஹான மௌலித்” மஜ்லிஸ் நிகழ்வுகளை, இன்று (04) புதன்கிழமை ஆரம்பிக்கின்றனர்.

இந்நிலையில், சமய நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிவாசல்கள், ஸாவியாக்கள், தக்கியாக்களில் விசேட “சுப்ஹான மௌலித்” மற்றும் “ஷமா இலுத் திர்மிதி” ஆகிய மஜ்லிஸ் நிகழ்ச்சிகளையும் ஒழுங்கு செய்துள்ளனர்.
அந்த வரிசையில், கொழும்பு மருதானை கிளிப்டன் ஒழுங்கையில் அமைந்துள்ள ‘கட்டக்கல மரத்தடி தக்கியா’ வில் வருடாந்தம் இடம்பெற்று வரும் புனித “சுப்ஹான மௌலித்” மஜ்லிஸ் வைபவம், நாளை 04 ஆம் திகதி புதன்கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து, இத்தக்கியாவில் இடம்பெறும்.
அல் ஹாஃபிழ் அல் ஆலிம் ஏ.எச்.எம். ஸஜ்ஜாத் ஹுஸைன் (கௌஸி), மௌலவி ஐ.ஏ. காதிர் கான் ( தீனி), மௌலவி எம்.எம். இன்ஜாஸ் (அல் பாஸி) உள்ளிட்ட தக்கியா நிர்வாகிகள் மற்றும் இப்பிரதேச வாழ் மக்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நாளை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து “சுப்ஹான மௌலித், இஷா தொழுகையைத் தொடர்ந்து “யா நபீ பைத்”, ” வாங்கள் ரஸூல் பைத்” மற்றும் விசேட துஆ என்பன, இத்தக்கியாவில் இடம் பெறவுள்ளதாகவும், தக்கியா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

( ஐ.ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *