உள்நாடு

மாவனல்லை ஸாஹிரா கல்லூரி மாணவன் சர்வதேச ஒலிம்பியாட் போட்டிக்கு தெரிவு ..!

இளம் கணித,விஞ்ஞான மேதைகளை உருவாக்கும் நோக்கில் வருடாந்தம் நடைப்பெற்று வரும் ஒலிம்பியாட் போட்டியில்,மாவனல்லை ஸாஹிரா தேசிய கல்லூரியில் தரம் ஆறில் கல்வி கற்கும் மாணவன் ஆர்.எம்.உஸைர் 2024 வலய மட்ட, மாகாண மட்ட ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கு பற்றி தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் ஊருக்கு கீர்த்தியைப் பெற்று கொடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் முன்னணிப் பாடசாலைகளைச் சேர்ந்த நூறு மாணவர்கள் பங்குப்பற்றிய இப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் ஆறாம் திகதி வரை சீனாவில் நடைப்பெறும் சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் பங்குபற்ற  இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சர்வதேச போட்டிக்கு இப் பாடசாலையில் இருந்து முதல் தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ள இம் மாணவன்
இலங்கையில் இருந்து பங்கு பற்றும் ஆறு மாணவர்களுள் ஒரே ஒரு முஸ்லிம் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
(பாரா தாஹீர் மாவனல்லை செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *