உள்நாடு

பிறை தென்பட்டதால் றபீஉல் அவ்வல் மாதம் ஆரம்பம்

ஹிஜ்ரி 1446 றபிஉல் அவ்வல் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று செப்டம்பர் 04 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் தலைப் பிறை தென்பட்டதால் இலங்கை வாழ் மக்கள் புனித றபிஉல் அவ்வல் மாதத்தை இன்று புதன்கழமை 04ஆம் திகதி மஹ்ரிபு தொழுகையுடன் ஆரம்பமாகின்றது என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழுவின் தலைவர் தலைவர் மெளலவி எம்.பி.எம். ஹிஸாம் (அல்-பத்தாஹி) உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.

கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தாஹிர் ரஷீன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் பிறைக்கு குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட பிரதி நிதிகள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், வளிமண்டவியல் திணைக்கள சிரேஷ்ட அதிகாரி , ஸ்ரீ லங்கா ஷரீஆ கவுன்சில் பிரதிநிதிகள், ஏனைய பள்ளிவாசல்கள், தரீக்காக்கள், ஸாவியாக்ளின் பிரதிநிதிகள் மேமன் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் பிரகாரம் மீலாதுன் நபி விழா எதிர் வரும் 2024.09.16 ஆம் திகதி (பிறை 12) திங்கற் கிழமை அனுஸ்டிகலாம் எனவும் பிறைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *