உள்நாடு

கொழும்பு பெரிய பள்ளியில் இடம்பெற்ற பொலிஸ் திணைக்கள வருட நிகழ்வு..!

1866ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 158வது வருட நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இந்த வகையில் இஸ்லாமிய சமய நிகழ்வு ஒன்று டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பங்கேற்புடன் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் தலைமையில் நேற்று மாலை (03) இடம் பெற்றது.

பெரிய பள்ளிவாசலின் மௌலவி அப்துல் ஹாபிலின் கிராஅத்துடன் நிகழ்வு ஆரம்பமானது. வரவேற்புரையை பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் வழங்கினார். பொலிஸ் திணைக்களத்தின் 158வது ஆண்டு நிறைவு தொடர்பான உரையை பிரதம அதிதியான டாம் வீதி பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பொறுப்பதிகாரி அஜித் பேதுரு ஆராட்சி வழங்கினார்.
விசேட துஆப் பிரார்த்தனையை பள்ளிவாசலின் பிரதம இமாம் மௌலவி றிஸ்வான் வழங்கினார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் அரபுக் கல்லூரி மாணவன் ஹாமிதின் கிராஅத்தும் இடம் பெற்றது.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *