விளையாட்டு

கம்போடியாவை எதிர்கொள்ளும் இலங்கை உதைப்பந்தாட்டக் குழாம் அறிவிப்பு

ஆசியக்கிண்ண உதைபந்து தொடருக்கான தகுதிகாண் போட்டிகளில் கம்போடியாவுக்கு எதிரான போட்டிக்காக சுஜான் பெரேரா தலைமையிலான 25 பேர் கொண்ட இலங்கை உதைபந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக குவைத் நாட்டைச் சேர்ந்த அப்துல்லா அல் முத்தைரி செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி பிளேஓப் முறையில் கம்போடியாவுடன் இரண்டு போட்டிகளில் மோதவிருப்பதோடு, முதல் போட்டி எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து இரண்டாவது போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 10ஆம் திகதி கம்போடியாவில் நடைபெறவுள்ளது. இலங்கை கால்பந்து அணி கம்போடியாவை எதிர்கொள்வது எட்டு ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

இலங்கை குழாம்:

சுஜான் பெரேரா, ஹர்ஷ பெர்னாண்டோ, மொஹமட் ஆகிப், மொஹமட் ஹஸ்மீர், மொஹமட் அமான், பாரத் சுரேஷ், வசீம் ரசீக், ஆதவன் ராஜமோகன், ஒலிவர் கெலாட், சகாய் ஸ்டீவன், லியோன் பெரேரா, வேட் டக்கர், ஜேசன் தயாபரன், ஜக் ஹிங்கர்ட், கிளாடியோ மத்தியஸ், ஷெனால் சன்தேஷ், சாமுவேல் டர்ரன்ட், வொரன் பெரேரா, அனுஜன் ராஜேந்திரன், பிராஸ் மர்ஷூக், ஜூட் சுப்புன், மொஹமட் ரிப்கான், கவீஷ் பெர்னாண்டோ, மொஹமட் முர்சித், தனுக்க ரனவீர.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *