உள்நாடு

ஆசிரியர் ரனீஸுக்கு கெளரவ விருதுகள்..!

இலங்கை சர்வமத நல்லிணக்க பரோபகார மன்றத்தினால் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி ஆசிரியர் எம்.ஆர்.முஹம்மது ரனீஸுக்கு தேசமான்ய மற்றும் தேசபந்து கீர்த்தி ஸ்ரீ கெளரவ விருதுகள் இலங்கை சர்வமத நல்லிணக்க பரோபகார மன்றத்தின் ஸ்தாபகர் அமல ஸ்ரீ தேரரின் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையின் அறநெறிக்கல்வி   மற்றும் சமூக சேவைகள் துறையில் அதிக சேவைகளை ஆற்றியமையை கெளரவித்து இவ்விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த 15 வருடகாலமாக அந்நஹ்லா அஹதியா பாடசாலையின் அதிபராக கடமையாற்றி வருவதுடன் பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பைச் செய்து வருகின்றார்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *