உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் ஜனாதிபதி தேர்தல் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக நியாஸ் நியமனம்

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஜனாதிபதி தேர்தலுக்கான புத்தளம் மாவட்ட இணைப்பாளராக முன்னாள் வடமேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 21 ம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தல் சம்மந்தமான சகல வேலைத்திட்டங்களுக்குமான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்ட இணைப்பாளராக முன்னாள் வடமேல் மாகாண சபையின் உறுப்பினர் எஸ்.எச்.எம் நியாஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமின் பணிப்புரையின் பெயரில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். தௌபீக் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனத்தை கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.


(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *