உள்நாடு

காட்டுக்களிபங்குளம் மோதலில் ஒருவர் பலி, மூவர் காயம்

அனுராதபுரம் பரசன்கஸ்வெவ பொலிஸ் பகுதிக்குட்பட்ட காட்டுக்குளியங்குளம் பகுதியில் வீடொன்றில் இரு குழுக்களுக்கிடையில் (02) ஏற்பட்ட மோதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அனுராதபுரம் தானாயம்குளம் பகுதியைச் சேர்ந்த எச்.எம்.லொக்கா என்றழைக்கப்படும் ஹேரத் முதியன்சலாகே சுமேத ஹேரத் என்ற 37 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

தனிப்பட்ட தகறாறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தாக்கம் நீண்டதனால் குறித்த பகுதியைச் சேர்ந்த இரு குழுக்களுக்கள் தடி மற்றும் கூரிய ஆயுதங்களை கொண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 37 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பான்கடவல பகுதியைச் சேர்ந்த 35 மற்றும் 37 வயதுடைய மூவர் இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பரசன்கஸ்வெவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *