உள்நாடு

ஷமாயிலுத் திர்மிதீ கிதாப் வழங்கி வைக்கும் நிகழ்வு..!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை, அந்நத்வா மற்றும் தில்லையாடி மஸ்ஜித் இமாம்கள் சம்மேளனம் இணைந்து புத்தளத்தில் உள்ள அனைத்து மஸ்ஜித்களிலும் ரபீஉனில் அவ்வல் மாதம் முதல் பிறையிலிருந்து மாதம் முழுக்க ஷமாயிலுத் திர்மிதீ (நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாறு) வாசிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டது.

அந்த அடிப்படையில் வெள்ளிக்கிழமை 30.08.2023 தில்லையாடி மஸ்ஜித் இமாம்கள் சம்மேளனம் தலைவர் உப தலைவர் மற்றும் செயலாளர் அவர்களுக்கான ஷமாயிலுத் திர்மிதீ வழங்கி வைக்கப்பட்டன.

அதேபோன்று பஸ்பராத் மஸ்ஜித் 2ம் கட்டை பேஷ்இமாம் அஷ்ஷேக் நஸ்பான் இஹ்யாயீ மற்றும் நிர்வாகிகளுக்கு மற்றும் ஹஸனாத் மஸ்ஜிதின் இமாம் அவர்களுக்கும் நத்வாவின் தலைவரால் ஷமாயிலுத் திர்மிதீ கிதாப் வழங்கி வைக்கப்பட்டது.

ஊடகப் பிரிவு
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா
புத்தளம் நகரக் கிளை

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *