உள்நாடு

புலமைப் பரிசில் பரீட்சை 15 ஆம் திகதி – அட்டவணை வெளியாகியது..!

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை, இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை, தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் இரண்டாவது வினாத்தாள் நடைபெறும்.
அன்று காலை 11.15 மணி முதல் மதியம் 12.15 மணி வரை, முதலாவது வினாத்தாள் நடைபெறும்.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, இம்முறை 2,649 பரீட்சை நிலையங்களில் நடைபெறும்.
இப்பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களின் அனுமதி அட்டைகள், அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் ஆவணங்கள் கிடைக்காத அதிபர்கள், www.doenets.lk அல்லது https://onlineexams.gov.lk/eic
என்ற இணையத் தளத்திற்குச் சென்று, ஆவணத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் தகவல்கள் திருத்தப்பட வேண்டுமானால், இன்று (02) முதல் செப்டம்பர் 9 ஆம் திகதி வரை, ஒன்லைனில் திருத்தம் செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
தொலைபேசி இலக்கங்கள் –
0112 784 208/ 278 4537 / 2784537 / 2786616 /2785413
அவசர இலக்கம் – 1911
தொலைநகல் – 0112 784422
என்றும், இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *