உள்நாடு

கொரோனா நல்லடக்க தவறுக்காக முஸ்லிம்களிடத்தில் மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில்..!

கொரோனா காலத்தில் உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்தவதில் ஏற்பட்ட பிரச்சினைக்காக முஸ்லிம் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனிநபர் விருப்பத்தின் அடிப்படையில் அடக்கம், தகனம் செய்வதற்கான சட்டமொன்றை கொண்டு வருவதாகவும், முஸ்லிம்களின் ஜனாசாக்களை தகனம் செய்யுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்திய தரப்பினரை சார்ந்திருக்கும் பொறுப்புகளை தேடியறிந்து, இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடுகளை செலுத்தவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் காத்தான்குடி பிரதேசத்தில் நடைபெற்ற “இயலும் ஸ்ரீலங்கா”- வெற்றி பேரணியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

 

Ranil24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *