உள்நாடு

Trust & Value Solution நிறுவனத்தின் யாழ் மாவட்ட விற்பனை பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி

Trust &Value Solutions நிறுவனத்தின் யாழ்மாவட்ட விற்பனை பிரதிநிதிகளுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சி கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் ,திருமறை கலாமன்றம் கலைதூது கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்மாவட்ட விநியோகஸ்தர் அல்ஹாஜ் ஷிபான் அவர்களின் பங்கேற்போடு நடைபெற்ற இந்நிகழ்வில், நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் திரு W.K.D குமார அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

நிகழ்வின் தொடர்ச்சியாக உரையாற்றிய ,மனிதவளம் மற்றும் நிர்வாகப் பணிப்பாளர் எம் .எச்.எம் இஹ்ஸான் அவர்கள் தமது உரையில், “நீர் பரிசுத்தத்தன்மையற்ற , சுத்தமில்லாத நீரை பருகுவதன் மூலம் வருடந்தோரும் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறக்கின்றனர்.

5 வயதிற்கும் குறைவான 3 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் இறக்கின்றனர். 1.8 பில்லியன் மக்கள் தமது பிரதான நீர் ஆதாரமாக சுத்திகரிக்கப்படாத நீரையே பயன் படுத்துகின்றனர்” எனக் கூறினார்.அத்துடன் தமது நிறுவனத்தின் உற்பத்தியாகிய கன்டிய தண்ணீர் பில்டகளின் தனித்துவம் பற்றியும் வடிகட்டப்படும் படிமுறைகள் பற்றியும் விளக்கமளித்தார்.

மேலும் இந்நிகழ்வில் ,யாழ் மாவட்டத்தின் பல விற்பனை பிரதிநிதிகள் கலந்து கொண்டதோடு யாழ்மாவட்ட விற்பனை முகாமையாளர் மற்றும் பேருவளை நியூஸ் ஊடக நிர்வாக அங்கத்துவரும், டிரஸ்ட் எண்ட் வெளியு சொழியுஷன் நிறுவன ஊடக பொறுப்பாளருமான இனாமுல் ஹஸன் துல்பிகார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.


(பேருவளை : பீ.எம் முக்தார்)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *