உள்நாடு

புஹுல்திவ சந்தி விபத்தில் ஒருவர் பலி – இருவர் காயம்

கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் பகுதியில் புஹுல்திவ சந்திக்கு அருகில் வான் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமடைந்துள்ளதாக கஹட்டகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்தனர்.

கஹட்டகஸ்திகிலிய வட்டரெக்னவ பகுதியைச் சேர்ந்த ஏ.ஆரியரத்ன என்ற (65) வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்த அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 56 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தில் இருந்து கஹட்டகஸ்திகிலிய நோக்கி பயணித்த வான் வேக கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *