உள்நாடு

கொலன்னாவா பள்ளிவாசல் நிருவாகிகளுக்கான பயிற்சிப் பட்டறை

கொலன்னாவ கிழக்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை, கொலன்னாவ மஸ்ஜிதுகளின் சம்மேளனம் என்பன முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் வழி நடாத்தலில் வெள்ளம் பிட்டி மற்றும் கொல்லன்னாவ பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் நிருவாகிகளுக்கான பள்ளிவாசல் நிருவாக நடைமுறைகள் மற்றும் வக்பு சட்ட நடைமுறைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளம் பிட்டி நாஸ் கலாசார நிலையத்தில் கொல்லன்னாவ கிழக்கு அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ் ஷெய்க் மெளலவி ஏ.என்.எம். பிர்தெளஸ் தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி பயிற்சிப்பட்டறையில் வளவாளர்களாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அலா அஹமட், மெளலவி எம்.ஐ.எம். மசீன், கொழும்பு மாவட்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் கொழும்பு மாவட்ட தலைவர் முக்திஸ் அஹமட், அஷ் ஷெய்க் மெளலவி எம்.எம். இர்பான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் மற்றும் கொதட்டுவது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொலன்னாவ மஸ்ஜிதுகளின் சம்மேளன தலைவர் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது பிரதம அதிதி உள்ளிட்டவர்களுக்கு ஏற்பாட்டாளர்களால் நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

நன்றி உரையை சம்மேளனத்தின் செயலாளர் ரி.எம். ஜுஹுர் வழங்கினார்.

 

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *