உள்நாடு

ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றத்திற்காக சவால்களுக்கு மத்தியில் மண்டியிடாத தலைமைத்துவமொன்று எமக்குத் தேவை..! -தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திசாநாயக்க

(NPP பொறியியலாளர்களின் தேசிய மாநாடு – ஸ்ரீ ஜயவர்தனபுர Monarch Imperial இல் – 2024.06.01.)

இதோ எங்கள் முன்னிலையில் இருப்பது இலங்கையால் நிர்மாணிக்கப்பட்ட மிகவும் தலைசிறந்த மனித வளமாகும். உங்களின் அறிவு, ஆற்றல். அனுபவம் இந்த நாட்டை மாற்றியமைக்க போதுமான அளவிலான ஆற்றல்களை நீங்கள் கொண்டுள்ளீர்கள்.

எமது நாட்டுக்கே இருப்பது பொறியியல் வரலாறாகும். கி.மு. 5 வது நூற்றாண்டில் பண்டுகாபய மன்னன் வசபக் குளத்தை அமைத்தான். அதிலிருந்து ஆரம்பித்த எமது நீர்ப்பாசனத் தொழிற்றுறை மாபெரும் கடல்போன்ற முப்பதாயிரம் குளங்களை அமைக்குமளவுக்கு பொறியியல் தொழில்நுட்பத்திற்கு உயிர்கொடுத்துள்ளார்கள். உலகத்தில் எவரையும் வியப்படையச் செய்கின்ற இராட்சதக் கால்வாய் (யோத எல) கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில் நிர்மாணிக்கப்படுகின்றது. கலா வெவவில் இருந்து திசா வெவ வரை 120 சிறிய குளங்களுக்கு நீரை நிரப்பி பதினோராயிரம் ஏக்கர் வயல்களுக்கு நீர்பாய்ச்சி 54 மைல்கள் நீளம்வரை நீர்ப்பிரவாகத்தை ஏந்தி இராட்சதக் கால்வாய் பாய்ந்து செல்கின்றது. முதல் 17 மைல்களில் சாய்வு ஒரு மைலுக்கு ஒரு அங்குலம் ஆகும். இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட இன்றைய உலகத்தை வியப்படையச் செய்விக்கின்ற சீகிரியாவில் மிகவும் முன்னேற்றமான நகரத் திட்டம் இருக்கின்றது. அங்கே மிகவும் முன்னேற்றமான வாஸ்துக்கலை நிலவுகின்றது. மிகவும் முன்னேற்றகரமான சூழற்றொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் விருத்தியடைந்த பொறியியல் தொழில்நுட்பம் நிலவுகின்றது. எமக்கு மிகவும் நீண்ட பொறியியல் வரலாறு உண்டு. அந்த வரலாறு 17 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதி 18 ஆம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதில் நீராவித் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டதும் உலகின் கைத்தொழில் துறையில் பாரிய பாய்ச்சலொன்று இடம்பெறுகின்றது. அதனூடாக புகையிரத சேவைகள், கப்பற் கைத்தொழில், சுரங்கக் கைத்தொழிலிலான முன்னேற்றங்கள், கைத்தொழில் துறைக்குள்ளே நீராவி இயந்திரம் சேர்க்கப்பட்டமை உலகில் பாரிய வெற்றிக்கான பாய்ச்சலாக அமைகின்றது. அதனை நாங்கள் முதலாவது கைத்தொழில் புரட்சி என அழைக்கிறோம்.

நாங்கள் கழித்துக் கொண்டிருப்பது நான்காவது கைத்தொழில் புரட்சியின் இறுதிப்பகுதியில் ஐந்தாவது கைத்தொழில் புரட்சியின் தொடக்கத்திலாகும். இந்த உலகில் தோன்றிய புதிய தொழில்நுட்ப மாற்றங்களை உறிஞ்சிக்கொள்வதில் நாங்கள் வெற்றிபெற்றோமா எனும் கேள்வி எம்முன் நிலவுகின்றது. இந்த கைத்தொழில் புரட்சிகளிலிருந்து தோன்றிய பொறியியல் அறிவு, தொழில்நுட்ப அறிவு, பொருளியல் மாற்றங்களை உறிஞ்சிக்கொண்ட நாடுகளால் அது அபிவிருத்தியை நெருங்குவதற்கான பாரிய பாய்ச்சலாக அமைந்தது. அதன் பெறுபேறாக 433 பில்லியன் டொலர் பொருளாதாரத்தை நிர்மாணிக்க வியட்நாமிற்கு இயலுமை கிடைக்கின்றது. தென் கொரியாவினால் 1.7 ரில்லியன் பொருளாதாரத்தை நிர்மாணிக்க இயலுமாயிற்று. பங்களாதேஷின் 459 பில்லியன் டொலர் பொருளாதாரமானது உலகில் தோன்றிய புதிய மாற்றங்களுடன் சார்புரீதியாக தமது கொள்கைகளை அமைத்துக்கொண்டமையால் ஆசியப் பிராந்தியம் 21 ஆம் நூற்றாண்டின் அபிவிருத்திப் பிராந்தியமாகி இருக்கின்றது. எனினும் இலங்கை 70 பில்லியன் டொலரையே நிர்மாணித்துள்ளது. உலகில் தோன்றிய புதிய மாற்றங்களை புதிய நிலைமாறல்களை சமூக மாற்றத்துடன் பொருளாதாரத்தின் முன்னேற்றத்துடன் சேர்த்துக்கொள்ளத் தவறிய நாடுதான் எமது நாடு. அதன் காரணமாகவே கொரியா 685 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் வியட்நாம் 380 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் பங்களாதேஷ் 70 பில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகையில் இலங்கை 12 பில்லியன் ஏற்றுமதி வருமானத்தை ஈட்டுகின்றது.

எமது ஆட்சியாளர்கள் வரலாற்றுமோகத்தில் தேசத்தை சிறைவைத்து இலங்கையை உலகத்திலிருந்து விலக்கிவைத்திருந்த ஆட்சியாளர்கள், உலகம் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் அவற்றின் பின்னால் ஆமைவேகத்தில் சென்றுகொண்டிருக்கிறோம். இந்த நிலைமையானது வெறுமனே தரவுகளுக்குள்ளே, இறக்குமதி – ஏற்றுமதிக்குள்ளே, தொழில்நுட்ப வறுமைநிலைக்குள்ளே மாத்திரம் நிலவ மாட்டாது. அது சமூகத்தில் அனர்த்தமொன்றை பேரழிவொன்றை உருவாக்கும்.

அதனால் 54% இற்கு கிட்டிய மக்கள் பலவிதமாக ஏழ்மைநிலையினால் பீடிக்கப்பட்டுள்ள நாடாக மாறியுள்ளது. சனத்தொகைகளில் 68% இற்கு சரியான உணவுவேளையொன்றை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.

34 இலட்சம் குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு 10 கிலோ அரிசியை வாங்குவதற்காக வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் தொடர்ந்தும் இந்த பயணத்தை இவ்விதமாகத் தொடர இடமளிக்கப் போகிறோமா? நாங்கள் இதனை மாற்றியமைப்போம்.

ஒவ்வொரு பிரஜைக்கும் தமது மனச்சாட்சியுடன் பிரசைகளின் அவலக்குரல் கேட்குமாயின், கண்களுக்குப் புலப்படுமாயின், பிரசைகளின் வேதனைகள், அவர்களின் வாழ்க்கையின் துன்பங்களை இதயத்தால் உணரத்தக்கதாக இருக்குமாயின் இந்த நிலைமையை மௌனமாக பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்காக முன்னணிக்கு வரவேண்டியது ஒவ்வொரு பிரசையினதும் செயற்பொறுப்பாகும். அதனை மாற்றியமைப்பதற்காக தெம்புடைய, நம்பிக்கை கொண்ட, எதிர்பார்ப்புடைய மாபெரும் மனிதக்குழுமத்தின் சேர்க்கைதான் தேசிய மக்கள் சக்தியாகும். அதனைச் சுற்றி ஒன்றுசேருமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். நாங்கள் அதனை மாற்றியமைத்திட வேண்டும். இதனை மாற்றியமைக்க வேண்டுமாயின் பொருளாதாரத் தேகத்திலும் சமூகத் தேகத்திலும் பாரிய அதிர்வினை ஏற்படுத்த வேண்டியுள்ளது. நாங்கள் எவ்வாறு இந்த அதிர்வினை ஏற்படுத்துவது? புதியவற்றைக் கண்டுபிடிக்கின்ற புதியவற்றை உருவாக்குகின்ற சமூகமொன்றை நாங்கள் நிர்மாணிக்கவேண்டும். வழமைபோல் விவசாயத்தை, கைத்தொழிலை, அன்றாட வாழ்க்கையை பேணிவந்து இந்த சமூகத்தை மாற்றிவிட முடியாது. இந்த சமூகத்தை மாற்றியமைத்திட வேண்டுமாயின் புதியவற்றை நிர்மாணிக்கவேண்டும். புத்தாக்கங்களை உருவாக்கிட வேண்டும். புதிய ஆராய்ச்சியாளர்கள், புதிய எண்ணக்கருக்கள், புதிய கருத்துக்கள், புதிய சந்தைகள் அவசியமாகும்.

எமது நாட்டில் முக்கியமான நிறுவனங்களாக அமைவன மிகவும் அதிகமாக பணப்புழக்கம் இடம்பெறுகின்ற நிறுவனங்களாகும். மிக அதிகமாக நிர்மாணிப்புகள் இடம்பெறுகின்ற இடத்தைத்தான் அமைச்சர் அதிகமாக விரும்புவார். நெடுஞ்சாலைகள் அமைச்சு கிடைக்குமாயின் ஜனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். துறைமுகங்கள் அமைச்சு கிடைப்பவருக்கு ஜனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். வலுச்சக்தி அமைச்சு கிடைக்குமாயின் ஜனாதிபதியின் மிகச்சிறந்த கவனிப்பு அவருக்கு கிடைக்கும். விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அமைச்சு கிடைப்பவருக்கு ஜனாதிபதியின் கவனிப்பு கிடைக்கவே மாட்டாது. அதனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்த IT அத்தியாவசியமாகும். எதிர்வரும் 29 ஆந் திகதி உலகத்தினதும் இலங்கையினதும் ஆராய்ச்சியாளர்களுடன் பாரிய கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்ட பெருந்தொகையானோர் இன்று உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையின் விஞ்ஞானிகள் மண் பற்றி, புதிய தொழில்நுட்பம் பற்றி பாரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். புற்றுநோய்க்கு நிரந்தர மருந்தினைக் கண்டுபிடிக்க இலங்கை விஞ்ஞானியொருவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். உலகம் பூராவிலும் பல்வேறு துறைகளில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள அவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளோம். பலர் 29 ஆந் திகதி இலங்கைக்கு வருகிறார்கள். இன்றேல் தொழில்நுட்பத்துடன் இணைந்து புதியதொரு கட்டத்திற்கு எமது நாட்டை மாற்றியமைக்க முயற்சி செய்து வருகிறோம்.

அடுத்ததாக சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவரொருவர் எமக்குத் தேவை. நோக்குடைய தலைவர் தேவைப்படுவது அரசியலுக்காக மாத்திரமல்ல. ஐ.டீ. துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய, பலம்பொருந்தியவகையில் முட்டிமோதக்கூடிய, சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய, எதிர்காலத்தைக் காணக்கூடிய சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவர்களை உருவாக்க வேண்டும். அந்த அத்தனை துறைகளும் நிர்மாணிக்கப்படவேண்டும். அரசியலுக்கு மாத்திரமே சிறந்த நோக்கினைக்கொண்ட தலைவர் தேவையென நாங்கள் பெரும்பாலும் நினைக்கிறோம். அவ்வாறு நினைக்கக் காரணம் எமது நாட்டில் நோக்கு இல்லாத தலைவர்கள் அரசியல்வாதிகளாக அமைவதாலாகும். எதிர்காலத்தைக் காண்கின்ற, அதற்கான திட்டங்களை வகுக்கின்ற அதற்கு தலைமைத்துவம் வழங்குகின்ற தலைவர்களை உருவாக்கவேண்டும். அதற்காக பாரிய அழுத்தங்களைக்கொண்ட ஆட்களாக அமையவேண்டும். அவர்கள் கண்டுபிடிக்கின்றவை, அவர்கள் உருவாக்குகின்ற கருத்திட்டங்கள், ஈடுபடுத்துகின்ற தொழில்முனைவோர் என்றவகையில் அந்த அனைத்திற்குமே அழுத்தம் கொடுக்கக்கூடிய ஆட்கள் உலகத்திற்காக புதியவற்றை நிர்மாணிக்கையில் அந்த அழுத்தத்தைக்கொண்ட ஆட்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். நிர்மாணத் தொழிற்றுறையில், வலுச்சக்தி துறையில், புதிய திசைகளைத் தெரிவுசெய்கின்ற வழிகாட்டுகின்ற தலைவர்கள் அவசியமாகும். எங்களுக்கு மாரி கியூரி, ஐன்ஸ்டைன், ஸ்டீவ் ஜோன்ஸ் போன்றவர்கள் அவசியமில்லையா? அந்த அனைத்து துறைகளிலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்துபவர்கள் அழுத்தத்தைக்கொண்ட தலைவர்களாவர். அதைப்போலவே எமக்கு வரக்கூடிய சவால்களை மீறிச்செல்லக்கூடிய தலைமைத்துவம் எமக்கு அவசியமாகும். சவால்களுக்கு மத்தியில் மண்டியிடுகின்ற, சவால்களைக்கண்டு அஞ்சியோடுகின்ற, வாரிச்சுருட்டிக் கொள்கின்ற தலைமைகளால் எமக்குப் பயனில்லை.

நான் இங்கு மீண்டும் கூறுவது அரசியல்வாதிகளைப் பற்றி மாத்திரமல்ல. சவால்களுக்கு மத்தியில் தப்பியோடியிருந்தால் அணுக்குண்டு தயாரிக்கப்பட்டிருக்க மாட்டாது. மனித குலம் இந்த அபிவிருத்தியை அடைய சவால்களை வென்றெடுக்ககூடிய தலைமைத்துவம் அவசியமாகின்றது. அவர்கள் தான் Crown Makers. இதனை முற்றாகவே மாற்றியமைக்கவல்ல தலைமைத்துவ சமுதாயமொன்று எமக்கு அவசியமாகும். இதுதான் இந்த மாநாட்டின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது. அதனால் நாமனைவரும் கிரவுன் மேக்கர்களாவோம். அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கிறோம்.

நாங்கள் பலவற்றை இழந்திருக்கிறோம். உலகில் தோன்றுகின்ற புதிய மாற்றங்களுக்கு இணையாக, சமாந்தரமாக எமது நாட்டை முன்நோக்கி கொண்டுசெல்ல வேண்டும். நாங்கள் உலகத்துடன் பல காத தூரத்தில் பின்னால் இருக்கிறோம். இதனை மாற்றியமைத்திட, ஒட்டுமொத்த முறைமையையும் மறுபுறம் மாற்றவேண்டுமாயின், வேகமாக திடசங்கற்பத்துடன், அரசியல் தலைமைத்துவத்துடன் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கமொன்று அவசியமாகும். அது ஏன்? இன்றைய உலகில் நிர்மாணத் தொழிற்றுறையின் 11 மில்லியன் டொலர்களாகும். 2030 அளவில் நிர்மாணத் துறையின் பொருளாதாரம் 17 ரில்லியன் டொலர்களாக ( 17,000 பில்லியன் டொலர்) அமையும். எமது நாட்டின் நிர்மாணத் தொழிற்றுறை 12 மில்லியன் டொலராகும். 22 மில்லியன் மக்களுக்கு மாத்திரம் அவசியமான நிர்மாணிப்புகளை மேற்கொண்டு எமது நிர்மாணத் தொழிற்றுறையை முன்னெடுத்துச் செல்லமுடியுமா? இந்த நிர்மாணத் தொழிற்றுறை இந்த இடத்திலிருந்து முன்நோக்கி நகரவேண்டும். சாத்தியவளம், ஆற்றல்கள், திறன்கள் நிறைந்த பலம்பொருந்திய கம்பெனிகள் இலங்கையில் இருக்கின்றன. நாங்கள் அவர்களை பாராட்டவும் பெறுமதியளிக்கவும் வேண்டும். அவர்களுடன் உலகின் நிர்மாணத் தொழிற்றுறை சந்தையில் பிரவேசிப்பதற்காக அவசியமான வழிகாட்டல்கள், பங்களிப்பு, அரச அனுசரணை தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியால் வழங்கப்படுமென்பதற்கு உத்தரவாதமளிக்கிறோம். 17,000 பில்லியன் டொலர்களில் ஒரு பகுதியையாவது நிர்மாணத் தொழிற்றுறையிலிருந்து ஈட்டிக்கொள்ள வேண்டும்.

உலகில் மென்பொருள் துறையில் வேகமான வளர்ச்சி இடம்பெற்று வருகின்றது. அது நாங்கள் கைவிட்டுள்ள ஒரு துறையாகும். வெள்ளைக்காரன் நாட்டைவிட்டுச் செல்லும்போது எமது தலைவர்களுக்கு கொடுத்துச் சென்றது தேயிலை, இரப்பர், தெங்கு மாத்திரமாகும். அதற்கு அப்பால்சென்று உலகத்தைக் காண்பதற்கான நோக்கு இருக்கவில்லை. IT துறை உலகில் வேகமாக வளரச்சியடைந்து வருவது அறுபதாம் தசாப்தத்தின் பின்னரைப் பகுதியில் ஆராய்ச்சிகள் மூலமாக வெளியில் வருகின்றது. எனினும் நாங்கள் அதற்குத் தயாராகவில்லை. எமது அண்டை நாடான இந்தியா IT துறையுடன் சமாந்திரமாக தமது பொருளாதார, கல்விக் கொள்கைகளை வகுத்துக் கொள்வதில் வெற்றியடைகின்றது. அதன் விளைவாக இந்தியா தற்போது 150 பில்லியன் பொருளாதாரத்தைப் பெற்று வருகின்றது. உலகில் எண்ணெய் எற்றுமதி செய்கின்ற பிரதான நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவின் பொருளாதாரம் 113 பில்லியன் டொலர்களாகும். உலகின் பிரதானமான மென்பொருள் நிறுவனங்களில் உயர்ந்த இடத்தை இந்தியா வகிக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சுந்தர் ஓர் இந்தியராவார். அதைப்போலவே அடோபி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சங்கான நாராயணன் ஓர் இந்தியராவார். ஐ.பீ.எம். நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று உத்தியோகத்தர் சத்யா நாதில்லா ஓர் இந்தியராவார். உலகம் எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது? எந்த வகையைச்சேர்ந்த பொருளாதாரத்தை நிர்மாணிப்பது எனும் நோக்கு இந்தியத் தலைவர்களிடம் இருந்தது.

தற்போது வெளிநாடு செல்பவர்களிடமிருந்து எமக்கு ஆறு பில்லியன் டொலர் வரை கிடைக்கின்றது. வெளிநாடு சென்றவர்களிடமிருந்து பெரும்பங்கு மத்திய கிழக்கில் இருந்தே கிடைக்கின்றது. உலகின் IT சந்தையில் பெரும்பகுதியை கைப்பற்றிக்கொள்ள தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் திட்டங்களை வகுத்துள்ளோம். 2023 அளவில் 19 பில்லியன் பெறுமதியான மென்பொருள் பொறியியலாளர் அவசியமாகி இருந்தார்கள். எம்மால் கார் மார்க்கெற்றுடன் அல்லது போன் மார்க்கெற்றுடன் போட்டியிட முடியாமல் போகும். எமக்கு IT மார்க்கெற்றில் இந்தியாவுடன் இணைப் போட்டியாளர்களாக மாறக்கூடிய இயலுமை நிலவுகின்றது. இணைச் சந்தையில் ஒரு பங்குடன் மாத்திரமல்ல, உலகத்தாருக்கு அவசியமான மென்பொருள் நிர்மாணிப்பில் ஒரு பங்கினை கைப்பற்றிக் கொள்வதற்கான கம்பெனியொன்றை நாங்கள் ஆரம்பிக்க வேண்டும். முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவேண்டிய நிலை எமக்கு ஏற்படும். தொடக்கத்தில் எம்மால் தனித்து பிரவேசிப்பதற்கான சாத்தியப்பாடு இல்லாதிருக்கக்கூடும். நாங்கள் ஏனைய மென்பொருள் கம்பெனிகளுடன் ஒன்றுசேர்ந்து வேர்ல்ட் மார்க்கெற்றிற்கு செல்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும்.

ஹைட்றோ பவர், சோலா பவர், வின்ட் பவர் சாத்தியப்பாடுகள் நிலவுகின்றன. இன்றளவில் எமது அனைத்து மின்நிலையத் தொகுதிகளையும் சேர்த்தால் நான்கு கிகாவொற் மாத்திரமாகும். 2040 இல் நாற்பது கிகாவொற் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனினும் வின்ட் பவரில் மாத்திரம் எமக்கு 40 கிகாவொற்றுக்கு மேலான கொள்திறன் நிலவுகின்றது. மிகச்சிறந்த சாத்தியப்பாடு ஆகும். உலகத்தின் எதிர்கால மார்க்கெற் பீன் றைட்ரஜன், புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி சாத்தியவளங்களிலேயே நிலவுகின்றது. அதற்கான மிகச்சிறந்த சாத்தியவளங்கள் எமது கைத்தொழில்கள், எமது பாவனையாளர்களுக்கு நியாயமான விலையில் மின்சாரத்தை வழங்குவதற்காக மாத்திரமல்ல. அதற்கு அப்பால் சந்தையில் பிரவேசிப்பது எவ்வாறு என சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த இடத்தில் எமக்கு சாத்தியப்பாடு நிலவுகின்றது. அதைப்போலவே மெராயன் தொழிற்றுறையிலும் எமக்கு பாரிய சாத்தியவளம் நிலவுகின்றது. இந்த 21 ஆம் நூற்றாண்டு ஆசியாவிற்கு உரித்தானதெனில் ஆசியாவின் பிரதான கேந்திரநிலையம் இலங்கையாகும். நாங்கள் ஆசியாவின் நாடுகளை வெற்றிகொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். வெற்றியின் பெறுபேறுகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது. “தனியாக தென்னை மரம் வளர்வதுபோல் நாடுகள் கரைசேர மாட்டாது” ஏனைய நாடுகளுடன் நிலவுகின்ற ஒருமைப்பாடு, அதைப்போலவே ஏற்படுகின்ற வளர்ச்சிகள், அதைப்போலவே ஏற்படுகின்ற அபிவிருத்திகள் என்பவற்றுடன் நேரொத்தவகையில் நாங்கள் எவ்வாறு சீராக்கிக்கொள்வது? ஆசியா பாரிய அபிவிருத்தி பற்றி 21 ஆம் நூற்றாண்டில் நம்பிக்கை வைத்திருக்குமாயின், ஆசியாவின் ஏனைய நாடுகள் அடைகின்ற வெற்றிகளின் நன்மைகளை எவ்வாறு இலங்கைக்கு கொண்டுவருவது. அவ்வாறு கொண்டு வருகையில் மெராயன் தொழிற்றுறை எமது நாட்டின் இடஅமைவின்படி முக்கிய இடம் வகிக்கின்றது. நாங்கள் அது பற்றிக் கவனஞ் செலுத்தி இருக்கிறோம்.

அதைப்போலவே எமக்கு கனிய வளங்கள் தாராளமாக பாரிய அளவில் நிலவுகின்றன. அது சம்பந்தமாக நீண்டகாலமாக ஆராய்ச்சிகளை மேற்கொண்ட பல ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். எமது அரசியல் அதிகாரிகளுக்கு அவசியமாவது மிகவும் பலம்பொருந்திய நிலையான நோக்கினைக்கொண்ட பயணப்பாதையல்ல. அவர்களுக்கு சதாகாலமும் தேவைப்பட்டது பயிங் அன்ட் செலிங் மாத்திரமே. இப்போதே எடுத்து இப்போதே விற்பது. அவர்களுக்கு இல்மனைற் படிவத்தை மணலுடன் ஏற்றியனுப்புவது இலாபமாகும். பொஸ்பேற் படிவத்தை மண்ணாகவே விற்பனை செய்வது இலாபமாகும். 1998 இல் மிகவும் முக்கியமான வழக்குத் தீர்ப்பு ஒன்று வழங்கப்பட்டது. இந்த வழக்குத் தீர்ப்பினை ஒருபுறம் வைத்துவிட்டு பொஸ்பேற் படிவினை மண்ணாகவே தற்போது விற்கிறார்கள். எம்மிடமுள்ள வளங்கள் மிகவும் நன்றாக முற்றாய்வு செய்யப்பட்டுள்ளன. புதிதாக முற்றாய்வு செய்யப்படவேண்டிய அவசியமில்லை. புதிய தொழில்நுட்பத்துடன் விருத்திசெய்யக்கூடிய ஆராய்ச்சியாளர்கள் விஞ்ஞானிகள் இலங்கையில் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒன்றுசேர்ந்து புதிய பொருளாதார திசைக்கு அவசியமான உற்பத்திகளில் நாங்கள் கைவைக்கவேண்டும். எங்களிடமிருந்து கைநழுவிச் சென்றவற்றை நாங்கள் வேகமாக பின்தொடர்ந்துசென்று கைப்பற்றிக்கொள்ள வேண்டும். 20 ஆம் நூற்றாண்டிலும் இந்த பாதை பற்றிய கலந்துரையாடலொன்று நிலவியது. திரு விமலசுரேந்திர 1918 இல் லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். அந்த கைத்தொழில் புரட்சிக்கு ஊக்கியாக அமைந்தது மின்னியலாகும். 1918 இல் சோவியத் தேசத்தின் அதிகாரத்தை லெனின் கைப்பற்றிக்கொண்ட பின்னர், ஒரு பெண் உடகவியலாளர் லெனினிடம் கேட்கிறார், ” நீங்கள் ரஷ்யாவில் சோசலிஸத்தை எப்போது முடிவுறுத்தப் போகிறிர்கள்? என்று. அவர் கூறுகிறார் “ரஷ்யாவை எப்போது இலத்திரனியல்மயமாக்கி முடிக்கிறோமோ, அன்றுதான்”. என்று. அன்று கைத்தொழில் புரட்சிக்கு அவசியமான தொழில்நுட்பத்தின் பிரதானமான சாதனத்தையும் ஊக்கியையும் வழங்கியது மின்னியலாகும்.

அன்று ரஷ்யாவில் அந்த லெனின் பிரகடனம் வரும்போது இலங்கையில் திரு. விமலசுரேந்திர லக்ஷபான மின்நிலையத்தை முன்மொழிகிறார். மேலதிக மின்சாரத்தைக்கொண்டு புகையிரதம் ஓட்டப்படவேண்டுமென அவர் கூறினார். அரசியல் ஒரு பண்டைய கால அதிகார நிலையாகும். இருந்ததோ நவீனத்துடன் பின்னிப்பிணைந்த அரசியல் அதிகாரசபையல்ல. அதனால் அந்த முன்மொழிவுகள் பயனற்றுப் போயின. ஔடதத்துறையில் பாரிய ஆராய்ச்சிகள், உற்பத்திகள் பற்றி பேராசிரியர் சேனக்க பிபிலே முன்மொழிந்தார். அவை ஏற்புடையதாகவில்லை. உலகில் வாஸ்துக்கலையில் ஏற்படுகின்ற வளர்ச்சிகளை இலங்கையில் உள்ள கலாசாரத்துடன் ஒருங்கிணைத்து அந்த துறையிலான வளர்ச்சிகளை எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது என்பது பற்றி மிதின் த சில்வா போன்றவர்கள் உரையாடுகிறார்கள். அவற்றை உள்வாங்கக்கூடிய அரசியல் தலைமைத்துவம் எமக்கு இருக்கவில்லை. இருந்ததோ பழமைவாத தலைமைகளாகும். தற்போது எம்மெதிரில் இருப்பது உருவாகி வருகின்ற இந்த மாற்றங்களை நன்றாக உள்வாங்கி எமது நாட்டை வேகமான மாற்றத்திற்கு இலக்காக்குவதாகும். இங்கு குழுமியுள்ள ஆயிரக்கணக்கான பொறியிலாளர்களாகிய நீங்கள் இந்த பணியில் முன்னணிவகித்து செயற்பொறுப்பினை ஈடேற்றவேண்டுமென நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். இந்த நாட்டைக் கைவிட்டுச்சென்ற புத்திஜீவிகள், தொழில்வாண்மையாளர்கள் பெருந்தொகையானோர் இருக்கிறார்கள். அவர்களின் அறிவும் அனுபவமும் இந்த தாய்நாட்டுக்கு அவசியமாகி உள்ளது. இந்த மாபெரும் மனிதக் கூட்டத்தினாலேயே இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

இலக்கியம், கலை ஆகிய துறைகளிலும் எமக்கு மாற்றம் அவசியமாகும். வெறுமனே அரசாங்க மாற்றம், ஆட்களின் மாற்றமல்ல. மறுமலரச்சி யுகமொன்று எமக்கு அவசியமாகும். முழுமையான முறைமையுமே சீரழிந்த ஒரு நாட்டை எளிதில் நிமிர்த்திவைக்க முடியாது. ஒவ்வொரு துறையிலும் புதிய மாற்றமொன்று அவசியமாகும். அதற்காக ஒரு நாடு தங்கியிருப்பது தொழில்நுட்பவியலாளர்கள், பொறியியலாளர்கள் ஆகிய உங்களின் கைகளிலாகும். அதில் முக்கிய இடம் வகிப்பவர்கள் நீங்களே. அதனால் உங்களின் பங்களிப்பு, இடையீடு இந்த மாற்றித்தின்போது அத்தியாவசியமானதாகும். அதற்காக முன்வருமாறு உங்களை அழைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *