உள்நாடு

ஹலால் சான்றிதழ் பேரவையின் அம்பாறை மாவட்டத்திற்கான அறிவூட்டல் செயலமர்வு.

“இலங்கையில் ஹலால் சான்றிதழ் வழங்கப்படுவதன் தேவையும், முக்கியத்துவமும்.”எ னும் தொனிப் பொருளிலான அறிவூட்டல் செயலமர்வு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அம்பாறை மாவட்டக் கிளையின் ஒருங்கிணைப்புடன் ஹலால் சான்றிதழ் பேரவையினால் அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் உலமாக்களுக்காக நேற்று பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

இன் நிகழ்வில் பேரவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகிப் வஹாப் மற்றும் அதன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஹலால் சான்றிதழ் பேரவையின் உள்ளக சரியா பிரிவுத் தலைவர் அஷ்ஷேஹ் இர்பான் முபீன் வளவாளராக திறன்பட செயலாற்றினார்.நிகழ்ச்சியினை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அம்பாறை மாவட்டக் கிளையின் செயலாளர் அஷ்ஷேஹ் ஏ.எல் நாசிர் கனி நெறிப்படுத்தினார்.நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

(இஸட்.ஏ.றஹ்மான்- ஒலுவில் செய்தியாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *