உள்நாடு

தொடரும் சீரற்ற காலநிலை..! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு முன்னெச்சரிக்கை..!

தற்போது பெய்துவரும் மழையுடன் கூடிய காற்றின் தாக்கம் காரணமாக சில இடங்களிலுள்ள வீடுகள் பகுதியளில் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் ஆங்காங்கு  சில இடங்களில் சிறியளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டிருப்பதாகவும் அறியமுடிகிறது. அத்துடன் பாதைகளின் ஓரமாக வளர்ந்துள்ள  சில மரங்களும் முறிந்து விழுந்திருப்பதுடன் அடிக்கடி மின்சார தடைகளும் ஏற்பட்டுவருவதுமுண்டு.
அவ்வாறிருக்க மழை பெய்வது  ஓய்ந்துள்ள சமயம் உக்குவளை சுதுகங்கை ஆற்றில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிர்தப்பிய சம்பவமொன்றும் இடம்பெற்றிப்பதாகவும் அறியமுடிகிறது.
இச்சந்தர்ப்பத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டுவரும் நிலைமையில் மேட்டு  தாழ் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அடையாளங்கள் ஏதும் அறியப்பட்டால் அவ்வாறான இடங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அது குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கும் அறிவிக்குமாறும் நீரேந்து பகுதிகளுக்கு மக்கள் நீராடச் செல்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் வேண்டப் பட்டுள்ளனர்.
(ஏ.எம்.ஜலீல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *