உள்நாடு

தர்காநகர் ஸாஹிரா கல்லூரி 1982 மாணவர்கள் ஒன்று கூடல்..!

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி 1982 கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களின் ஒன்று கூடல் எதிர் வரும் 23ஆம் திகதி (23-5-24) வியாழக்கிழமை மு.ப.9.00 மணிக்கு தர்கா நகர் மீரிப்பன்னை வீதியில் உள்ள நதா வரவேற்பு மண்டபத்தில் நடைபெறும்.

1982 கா.பொ.த.சாதாரண தர மாணவர் அமைப்பின் தலைவரும் தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்க தலைவருமான ஆன ஏ.பி.எம்‌.ஸுஹைர் ஹாஜியார் தலைமையில் நடைபெறும் இந்த ஒன்று கூடலில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள வேலைத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடப்பட்டுள்ளது உள்ளதாக செயலாளர் ஏ.ஐ.எம்.பஹ்மி (ஈரான்) தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் 1982 கா.பொ.த.சாதாரண தர மாணவர்கள் தவறாது சமூகமளிக்குமாறும் செயலாளர் கேட்டுள்ளார்.

தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரியின் எதிர்கால முன்னேற்றத்திற்கு எவ்வாறு பங்களிப்பு செய்வது குறித்தும் இங்கு ஆராயப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *