உள்நாடு

எமனிடம் பரிந்து பேசி என்னையும் அழைத்துக் கொள்ளுங்கள். – பாலிதவிடம் கெஞ்சும் மேர்வின் சில்வா.

நானும் விரைவில் பாலித சென்ற இடத்துக்கு செல்ல ஆசைப்படுகிறேன் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார் .

மறைந்த பாலித தேவாரப்பெருமவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் நானும் பாலிதவும் சிறந்த நண்பர்கள்.அடிக்கடி நாட்டு நடப்புகள் பற்றி கலந்துரையாடுவோம்.

நேற்று முன்தினமும் அவரோடு பேசுவதற்கு நினைத்திருந்த போதே இத் துக்ககரமான செய்தி வந்தது. மசங் பாலித என விளித்துப் பேசிய அவர் நீ சென்றுள்ள இடத்துக்கு நான் விரைவில் வருவேன்.ஏதும் தாமதமானால் எமனிடம் பிரஸ்தாபித்தாவது என்னை அழைத்துக் கொள்ளுங்கள் பாலித என அவர் உணர்வு பூர்வமாக தெரிவித்தார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *