உள்நாடு

பாலிதவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை

மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெருமவின் இறுதிக் கிரியைகள் இன்று (19) இடம்பெறவுள்ளது.

பாலித தெவரப்பெரும கடந்த 16ஆம் திகதி மின்சாரம் தாக்கி தனது 64ஆவது வயதில் உயிரிழந்தார். பின்னர் 17ஆம் திகதி இரவு அவரின் இல்லத்திற்கு சடலம் கொண்டுவரப்பட்டதுடன், நேற்று இரவும் கூட பெருமளவான மக்கள் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வருகை தந்திருந்தனர். அத்துடன் இன்று பிற்பகல் 2 மணியளவில் பாலித தெவரப்பெரும உயிருடன் இருக்கும் போது தானே தயார் செய்த மயானத்தில் பூதவுடல் அடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராகவும், உள்நாட்டலுவல்கள்இ வடமேற்கு அபிவிருத்தி மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சராகவும் மற்றும் வனவிலங்கு பிரதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

மக்கள் கஷ்டப்படும் போது, பெரும் சமூகப் பணியை ஆற்றிய அரசியல்வாதியாக பாலித தெவரப்பெரும சமூகத்தில் முக்கிய இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *