உலகம்

அப்துல்லாஹ் யாமீனின் சிறை தண்டனையை இரத்து செய்த நீதிமன்றம்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை வரை ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தீவை குத்தகைக்கு விட்டு பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் அந்நாட்டின் நீதிமன்றம் கடந்த 2022ஆம் ஆண்டு அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.தொடர்ந்து கடந்த ஆண்டு ஓக்டோபர் மாதம் அப்துல்லா யாமீன் வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே தனக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அப்துல்லா யாமீன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அப்துல்லா யாமீனுக்கு விதிக்கப்பட்ட 11 ஆண்டு சிறை தண்டனையை இரத்து செய்து உத்தரவிட்டது.

கடந்த 2022ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட விசாரணை நியாயமான முறையில் நடைபெறவில்லை என்றும, இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மறுவிசாரணை குறித்த திகதிகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

மாலைதீவில் அடுத்த 2 நாட்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அப்துல்லா யாமீனின் விடுதலை அந்நாட்டின் ஜனாதிபதி முகமது முய்சுவின் கட்சிக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. முகமது முய்சுவும், அப்துல்லா யாமீனும் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *