விளையாட்டு

உடல் நலக்குறைவால் ரி20 தொடரிலிருந்து வெளியேறிய குசல் பெரேரா..!

பங்களாதேஷ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்காக இலங்கை குழாம் இன்று அதிகாலை பங்களாதேஷ் சென்றடைந்த நிலையில் இலங்கை அணியின் இடது கை அதிரடித் துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேரா உடல் நலக் குறைவு காரணமாக தொடரிலிருந்து வெளியேறியிருக்கிறார்.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் முதல் அங்கமாக 3 போட்டிகள் கொண்ட ரி20 எதிர்வரும் 4ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இத் தொடருக்கான 17 வீரர்கள் கொண்ட இலங்கை குழாம் இன்று அதிகாலை இலங்கையிலிருந்து புறப்பட்டது காலை பங்களாதேஷ் சென்றடைந்தது.

இந்நிலையில் அதிரடி இடது துடுப்பாட்ட வீரரான குசல் ஜனித் பெரேராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ரி20 தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *