உள்நாடு

படிப்பை கைவிட்ட 129000 சிறுவர்கள்

இலங்கையிலுள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 சதவீதமானவர்கள் அல்லது சுமார் 129000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை இடை நிறுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அத்தோடு இலங்கையில் எடைக்குறைவான குழந்தைகளின் வீதம் மேலும் அதிகரித்துள்ளதாகவும், இது 2022 ஆம் ஆண்டில் 19.5 சதவீதமாகவும், 2023 ஆம் ஆண்டில் 21 சதவீதமாகவும் காணப்படுவதாக சுகாதார திணைக்களத்தின் கீழ் உள்ள சுகாதார மற்றும் போஷாக்கு பணியகம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *