உள்நாடு

இன்று புதிய கூட்டணியின் 2ஆவது கூட்டம் கொழும்பில். கொழும்பு மற்றும் கிழக்கின் அரசியல் பிரபலங்கள் மேடையேறவுள்ளதாகவும் தெரிவிப்பு

‘வலுவான பொருளாதாரம் – வெற்றிகரமான பயணம்’ எனும் தொனிப்பொருளின் கீழ், புதிய கூட்டணியினால் நடத்தப்படும் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டம், இன்று (24) சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில், புதிய கூட்டணி இன் ஸ்தாபகர் நிமல் லான்சா, கொழும்பு மாவட்டத் தலைவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்ஷன யாப்பா, பிரியங்கர ஜயரத்ன, சுகீஸ்வர பண்டார ஆகியோர் பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பு மாவட்டங்களைப் பிரதி நிதித்துவப்படுத்தும் பல பிரபலமான அரசியல்வாதிகள் இணையவுள்ளதாக புதிய கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(ஐ.ஏ.காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *