உள்நாடு

அரசை கண்டித்து இன்று போராட்டம்

தேசிய வள பாதுகாப்பு இயக்கம் (NRPM) இலங்கையில் முக்கியமான பல பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக இன்று (21) கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.

இவ் ஆர்பாட்டம் தொடர்பில் தேசிய வள பாதுகாப்பு இயக்கம் குறிப்பிடுகையில் ‘விமான நிலையங்கள்,மின்சாரம், தபால் நிலையங்கள், தொலைத்தொடர்பு, ரயில்வே, காப்பீடு, வங்கிகள் மற்றும் பல முக்கியமான பொது நிறுவனங்களை தனியார் மயமாக்கும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற திட்டத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்.

‘இந்த முன்னோடியில்லாத விற்பனையானது தேசிய பாதுகாப்புக்கும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கும் அத்துடன் இலங்கையர்களின் வாழ்வாதாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாகும்’ என தேசிய வள பாதுகாப்பு இயக்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ் ஆர்பாட்டம்கொழும்பு கோட்டை லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய வள பாதுகாப்பு இயக்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *