உள்நாடு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப ஐ.நா உணவு, விவசாய அமைப்பின் பங்களிப்பு அவசியம்

இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும், விவசாய நவீன மயமாக்கல் வேலைத்திட்டத்தை முன்கொண்டு செல்வதற்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பங்களிப்பு அவசியமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி கூ தொங்யுவுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் தொடர்பாக ஐக்கிய நாடுகளின் பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கம் அளித்தார்.

இவ்வேலைத்திட்டத்தை பாராட்டிய பணிப்பாளர் நாயகம் நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, இந்த நெருக்கடியான நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பு தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும் என பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.

இச்சந்திப்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பணிப்பாளர் ஆகியோர் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *