உள்நாடு

இலங்கை வந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்

இரு தரப்பு உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமிர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் அழைப்பின் பெயரில் குறித்த தூதுக்குழுவினர் ஈரான் விமான சேவைகளுக்கு சொந்தமான ஈரான் 05 என்ற விமானத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஈரான் வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியனுடன் இருதரப்பு விவாதங்களை நடத்தியதன் பின்னர் இவ் இரு நாள் விஜயத்தின் போது ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் இலங்கையின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *