உள்நாடு

பாணந்துறை இன்சயிட் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு.

பாணந்துறை இன்சயிட் கல்லூரி மாணவர்களின் வருடாந்த பரிசிளிப்பு விழா கடந்த சனிக்கிழமை (17) தெஹிவல ஜெயசிங்க மண்டபத்தில் கல்லூரியின் பணிப்பாளர் ஸனீரா தாரிக்ஸாட் தலைமையில் இரு அமர்வுகளாக இடம் பெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அகில இலங்கை தனியார் பாடசாலைகளின் சம்மேளன பொதுச் செயலாளர் திருமதி துசாரி கொரல்கே மற்றும் பாடசாலையின் அதிபர் மலிந்து டி சில்வாஇ பாடசாலையின் நிறுவுனர் தாரிக்ஸா உள்ளிட்ட உதவி அதிபர்கள்இ பிரதி அதிபர்கள்இ ஆசிரியர்கள்; பெற்றோர்கள்இ மாணவர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மாணவர்களின் கண்கவர் கலை நிக்ழவுகள் இடம் பெற்றதுடன் வகுப்பு ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுச் சின்னங்கள்இ சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் அதிதிகளால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஏ.எஸ்.எம்.ஜாவித்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *