விளையாட்டு

இலங்கை எதிர் ஆப்கான் ரி20 தொடர், டிக்கெட்டுக்கள் விற்றுத் தீர்ந்தன..!

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் தீர்மானமிக்க 2ஆவது மற்றும் 3ஆவது போட்டிகளுக்கான டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூவகைப் போட்டித் தொடரில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் நேற்றைய தினம் 3 போட்டிகள் கொண்ட ரி20 தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் ஆரம்பித்திருந்தது. இப்போட்டியை காண 18000 கிரிக்கெட் ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.

மேலும் நாளை இடம்பெறவுள்ள 2ஆவது மற்றும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள 3ஆவதும் இறுதியுமான போட்டிக்குமான டிக்கெட்டுகள் அனைத்தும் இன்று மாலையுடன் விற்றுத் தீர்ந்து விட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அத்துடன் டிக்கெட் கவுன்டர்களுக்கு எவரும் வரவேண்டாம் எனவும் அறிவித்துள்ளது.

இலங்கை அணி மீண்டும் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருவதன் காரணமான இலங்கை ரசிகர்கள் வீரர்களை உற்சாகப்படுத்த மீண்டும் போட்டி இடம் பெறும் மைதானங்களுக்கு தற்காலத்தில் சமூகமளிப்பதை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *