உள்நாடு

தேசிய சுதந்திர தினத்தின் 76 ஆவது வருட ஞாபகார்த்தமாக, வை.எம்.எம்.ஏ. பேரவையின் இரத்த தான நிகழ்வு..

கொழும்பு – 09, தெமட்டகொடை வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் கொழும்பு மத்திய கிளை, தேசிய சுதந்திர தினத்தின் 76 ஆவது வருட ஞாபகார்த்தமாக ஒழுங்கு செய்துள்ள விசேட இரத்த தான நிகழ்வு, (15) வியாழக்கிழமை இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, கொழும்பு – நகர மண்டபம், தர்மபால மாவத்தையில் (விக்டோரியா பூங்காவிற்கு முன்னால்) இலக்கம் 191 இல் அமைந்துள்ள ஜயவர்தன மத்திய நிலையத்தில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த நாட்டில் குறிப்பாக முஸ்லிம்கள் இரத்த தான நிகழ்வுகளை நடாத்துவது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
தேசிய தினம், சுதந்திர தினம் எல்லோருக்கும் பொதுவானது. தேசிய சுதந்திர தினத்தின் 76 ஆவது வருட ஞாபகார்த்தமாக, இன்று (15) காலை 9 மணி முதல் நடாத்துகின்ற இந்த சிறப்பான இரத்த தான நிகழ்வில், கொழும்பையும் கொழும்பைச் சூழவுள்ள முவ்வின மக்களும் வந்து கலந்து கொள்ளுமாறும், இன, மத, மொழி வேறுபாடுகளின்றி தங்கள் இரத்தத்தை தானமாகக் கொடுத்து மேலான நன்மைகளைப் பெற்றுக் கொள்ளுமாறும், வை.எம். எம். ஏ. பேரவையின் கொழும்பு – கம்பஹா மாவட்டங்களுக்கான பணிப்பாளர் நஸாரி காமில் அன்பு அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது..

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *