விளையாட்டு

தீர்மானமிக்க 2ஆவது போட்டி இன்று. துஸ்மந்த சமீர காயத்தால் விலகல்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் தீர்மானமிக்க 2ஆவது போட்டி இன்று கண்டி பல்லேகல மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெத்தும் நிசங்கவின் வரலாறு சிறப்புமிக்க இரட்டைச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 42 ஓட்டங்களால் இலகு வெற்றியை பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானிக்க 2ஆவது போட்டி இன்று பகலிரவு போட்டியாக பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இலங்கை அணியும், இப்போட்டியில் வெற்றியைப் பெற்று தொடரை சமப்படுத்தும் முனைப்புடன் ஆப்கானிஸ்தான் அணியும் களம் காணவுள்ளது.

மேலும் முதல் போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர இத் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது இலங்கை அணிக்கு சற்று பாதிப்பை ஏற்படுத்தும் எனலாம். அவருக்கு பதிலாக அசித்த பெர்ணான்டோ இணைக்கப்பட்டுள்ளார். மேலும் இன்றைய போட்டியினைப் பொறுத்த வரையில் இரு அணிகளும் தத்தமது அணியில் பெரிய அளவிலான மாற்றங்களை செய்யாது முதல் போட்டியில் பங்கேற்ற வீரர்களையே களமிறக்கும் என எதிர்பார்க்கலாம்.   (அ)

 

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *