வணிகம்

நான்கு நிறுவனங்கள் இணைந்து ஆரம்பித்த டெலி சுகாதார வேலைத் திட்டம்..

லங்கா ஈ டொக் மற்றும் அப்பலோ ஹொஸ்பிட்டல் குருப் இந்தியா டெலி ஹெல்த் சேர்விஸ் மற்றும் கிளினிக்கல் இணைந்து ஈ வழியாக டெலி சுகாதார முறை ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந் நிகழ்வு ஹில்டன் கொழும்பில் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மற்றும் அப்லோ ஹொஸ்பிட்டல் மற்றும் லங்கா ஓ டொக் டொக்டர் நிலுக்கா வெலிக்கல, பணிப்பாளர்கள், இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்னவும் கலந்து சிறப்பித்தார். இங்கு பிரதான உரையை அமைச்சர் ஹரின் பெர்னான்டோ நிகழ்த்தினார்.

டொக்டர் நிலுக்க வெலிக்கல பணிப்பாளர் லங்கா ஈ டொக் மற்றும் செரன்டிப் தலைவி அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார். நோயாளிகளின் நிர்க்கதியான நிலைகளில் இத் திட்டம் அவர்களுக்கு இலகுவானதொரு நிவாரணம் வழங்கும் திட்டமாக ஈ.டொக் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் உள்ள மக்களுக்கு நேர்த்தியானதொரு சுகாதார முறைமையை வழங்கும் நோக்குடன் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

 

டொக்டர் ஹரிபிரசாத் (தலைவர், அப்லோ கொஸ்பிட்டல் கூட்டு நிறுவனம்) அவர்களது வாழ்த்துச் செய்தியில் இந் நிகழ்வில் கலந்து கொண்டுள்ள அமைச்சர்கள் மற்றும டொக்டர் நிலுக்கா வெலிக்கல மற்றும் லங்கா ஈ டொக் கிளினிக் சங்கம் மற்றும் அப்லோ கொஸ்பிட்டல் இலங்கை -இந்தியா சுகாதார சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதற்கு நாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

டொக்டர் ரவதி ராஜ் (தலைவர், ஹிமட்டோ ஒன்கொலேஜ் அப்லோ வைத்தியசாலை) புற்றுநோய் மற்றும் பிரேமநாந்தா உப தலைவர் அப்லோ தொலைபேசி சுகாதார சேவை எவ்வாறு இந்தியாவில் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை விளக்கினார். ஜித்து ஜோ உப தலைவர் சர்வதேச பிரிவு அப்ளோ கொஸ்பிட்டல் மற்றும் டொக்டர் நிலுக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு பரிமாறிக்கொண்டனர். மற்றும் தயாசிரி ஜயசேகர டொக்டர் வண. பனிலாய ஆனந்த தேரோ ஆகியோர்களும் இந் நிகழ்விற்கு சமூகமளித்திருந்தனர்.

 

லங்கா ஈ டொக்

லங்கா ஈ டொக் ஆனாது இலங்கை அமைப்புடன் சர்வதேச மட்டத்தில் உள்ள வைத்திய ஆலோசனைக்கு இலங்கை மக்களுக்கு சேவைக்காக தொடர்கின்றது. டொக்டர் நிலுக்கா வெலிக்கல வை தலைவியாகக் கொண்டு வர்த்தக நோக்கத்துடன் இதனை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

அப்ளோ வைத்தியாசலை நிறுவன லிமிட்டெட்

டொக்டர் பிரதாப் ரெட்டி அவர்கள் 1983 ஆம் ஆண்டு இந்தியாவில் முதலாவது கூட்டுத்தாபண அப்லோ கொஸ்பிட்டலை சென்னையில் ஆரம்பித்தார்கள். இது தற்பொழுது ஆசியாவிலே ஒர் சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நிறுவனமாக விளங்குகின்றது. இங்கு 10 ஆயிரம் கட்டில்கள் கொண்டள்ளது. 72 வைத்தியசாலைகள். 5000 பாமசிகளையும் கொண்டுள்ளது. 100 ஆரம்ப சுகாதார நோய் பராமரிப்பு நிலையங்கள் அத்துடன் உலகில் பல்வேறு நாடுகளில் கிளைகளைக் கொண்டுள்ளது. அத்துடன் 15 தாதியர்கள் கல்லுாரிகள் கொண்டது. அத்துடன் உலகலாவிய ரீதியில் சுகாதாரத்துறை சம்பந்தப்பட்ட கிளிளிக் ஆலோசனை மற்றும் சுகாதார கல்வியை ஆராய்ச்சிகளையும் வழங்குகின்றது.

இந்திய அரசாங்கம் இவ் வைத்தியசாலை உலகலா ரீதியில் அங்கிகரித்து அப்லோ வைத்தியசாலையின் தலைவர் டொக்டர் பிரதீப் சி.ரெட்டி, அங்கிகரித்து விபுசன பட்டம் வழங்கி 2010ல் 40 வருட சேவையையை அங்கிகரித்து நினைவு முத்திரையும் வெளியீட்டு வைத்தது. உலக முதல் தர வைத்திய சேவையையும் தொழில்நுட்ப பரிசோதனை ஆராய்ச்சி மருத்துவ சேவையை இந்த உலக நாடுகளின் மக்களுக்காக வழங்குகின்றது.

 

(அஷ்ரப் ஏ சமத்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *