உள்நாடு

ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசலில் இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு..

ஒலுவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அதன் உப குழுக்கள் மற்றும் அல்ஹம்றா 2001 GCE O/ L பெட்ஸினர் இணைந்து ஏற்பாடு செய்த இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 76 வது சுதந்திர தின நிகழ்வு ஒலுவில் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் சிரேஷ்ட பொறியாளர் A.M. றாபி தலைமையில் நடைபெற்றது. இதில் அதிதிகளாக ஒலுவில் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி லெப்ரினல் கொமாண்டர் K.N.S.D. புத்திக , இலங்கை இராணுவ மேஜர் கீர்த்தி சிறீ ருவான் மற்றும் ஒலுவில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மர நடுகையும் அல்ஹம்றா 2001 GCE O/L பெட்ஸினரினரின் இரத்த தான நிகழ்வும் , சமூகப் பணிகளில் ஈடுபட்டவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் இடம் பெற்றன. ஒலுவில் அன் நஹ்ழா பாலர் பாடசாலை மாணவர்களும் இன் நிகழ்வில் கலந்து கொண்டமை விசேடமானதாகும். இதற்கான ஊடாக அனுசரணை ஒலுவில் மீடியாவினால் வழங்கப்பட்டது.

 

(ஒலுவில் -இஸட்.ஏ.றஹ்மான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *