உள்நாடு

காத்தான்குடியில் பிரமாண்டமாக நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வு..!

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்,நகரசபை, ஜம் இய்யதுல் உலமா, வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இலங்கையின் 76 வது சுதந்திர தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (04) காத்தான்குடி பிரதான வீதி ஹிஸ்புழ்ழாஹ் கலாச்சார மண்டபம் முன்றலில் நடைபெற்றது.

சம்மேளனத்தின் தலைவர் ஏ.எம்.றவூப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மேஜர் ஜெனரல்.விபுல சந்தஸ்ரீ பிரதம அதிதியாகவும் கல்லடி 243 படைப் பிரிவின் பிரிகேடியர் குமாரசிங்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பேண்ட் வாத்தியம், அணிநடைவகுப்புக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் என்பன நிகழ்வை அலங்கரித்தரித்தமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *