உள்நாடு

றியாத் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் றியாத்தில் மாணவர் கலை விழா – 2024

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

றியாத் தமிழ்ச் சங்கம் வழங்கும் மாணவர் கலை விழா – 2024 நிகழ்வு எதிர்வரும் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவின் றியாத் தில் உள்ள இந்திய பன்னாட்டு பள்ளி அரங்கத்தில் மாலை 05 மணி முதல் இடம்பெறவுள்ளது.
தமிழ் மாணவர்களின் கல்வி, விளையாட்டு, தனித்திறன், சார்ந்த சாதனைகளுக்கான அங்கீகாரமளிக்கும் பேச்சுப்போட்டி, கலைத்திறன், தனித்திறன் போட்டிகளின் பரிசளிப்பு நிகழ்ச்சியாக இது இடம்பெறும்.

இந்நிகழ்வில் சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் பி.எம். அம்ஸா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

இந்நிகழ்வைக் காண அனுமதி இலவசம் என்பதால் அனைவரும் கலந்து கொள்ளலாம் என திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *