உள்நாடு

பொருளாதார நெருக்கடி: நாட்டில் வேலையின்மை விகிதம் அதிகரிப்பு..

கடந்த ஆண்டில் மாத்திரம் 25 சத வீதமானோர் வேலையை இழந்துள்ளனர் என்றும், பொருளாதார நெருக்கடி காரணமாகவே, நாட்டில் வேலையின்மை விகிதம் இவ்வாறு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வேலையின்மை விகிதம் 5.2 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கையில் வேலையின்மை விகிதம் 4.7 வீதமாகக் காணப்பட்ட நிலையில், இரண்டாவது காலாண்டில், 5.2 வீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் மாத்திரம் 15 – 24 வயதுடைய இளைஞர்களில் 25.8 சத வீதமானோர் வேலையை இழந்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *