உள்நாடு

கொழும்பில் 6 அடுக்குமாடி குடியிருப்புகள், 8 கட்டிடங்கள் அபாயகரமான நிலையில் – கொழும்பு மாநகர சபை இடிக்க தீர்மானம்

கொழும்பு நகரில் உள்ள 6 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 8 கட்டிடங்கள், மிகவும் அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர் செய்ய அல்லது இடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மா நகரம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், மா நகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி இதனைத் தெரிவித்தார்.
கொழும்பு மா நகர சபை எல்லைக்குள் 8 கட்டிடங்கள் அபாய நிலையில் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்படி, கெத்தாராம பாரோன் ஜயதிலக்க கல்லூரிக் கட்டிடம், ஜும்ஆ மஸ்ஜித் வீதி வீடுகள், திம்பிரிகஸ்யாய அபயராம மூன்று மாடி வீடுகள் உட்பட 6 அடுக்குமாடி குடியிருப்புகள் அடங்குவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *