உள்நாடு

TIN இலக்கத்தைப் பெறுவது தேசிய அடையாள அட்டைக்குச் சமனானது – ரவி கருணாநாயக்க தெரிவிப்பு

TIN இலக்கம் பெறுவது தேசிய அடையாள அட்டையை வைத்திருப்பது போன்றதொரு செயலாகும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க, கொழும்பில் (19) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது வலியுறுத்திக் கூறினார்.
சரிந்த பொருளாதாரம் படிப்படியாக சிறப்பாகியும் வருகிறது. அத்துடன் வரியும் விதிக்கப்படுகிறது.
பொருளாதார பலம் உள்ளவர்களே, விலைக்கு வாங்கப்படுவதாகவும், TIN இலக்கம் இருப்பதால் வரி செலுத்த வேண்டியதில்லை எனவும், ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மத்திய அரசாங்கம் 2024 இல் 3 வீதம் சாதகமான பொருளாதார வளர்ச்சியை அடையத் திட்டமிட்டுள்ளதாகவும், அந்தப் பொருளாதார வளர்ச்சியை 2025 இல் 5 வீதமாக அதிகரிக்கவும் அவரின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024 மற்றும் 2025 ஆகிய இரண்டு வருடங்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் இரண்டு வருடங்களாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ரவி கருணாநாயக்க, பணத்தை அச்சடித்து வங்கிகளில் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தீவிரமான எழுச்சியைக் கருத்தில் கொண்டு, ரூபாவின் பெறுமதி இனிமேல் குறையாது எனவும், அத்துடன் பணவீக்கம் உயராது என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
2024 ஆம் ஆண்டு மொத்த தேசிய உற்பத்தியில் 15 வீதம் என்ற இலக்கை அடைய, ஜனாதிபதி மத்திய அரசாங்கத்தைத் திட்டமிட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.
நாட்டுக்குப் புதிய பொருளாதாரம் தேவை எனவும், ஜனாதிபதி மிகவும் திட்டமிட்டு அந்தப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதாகவும், அத்துடன் தொழில் வாய்ப்பை உருவாக்கி நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல ஜனாதிபதி பாடுபட்டு வருவதாகவும், ரவி கருணாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.

 

(ஐ. ஏ. காதிர் கான்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *