உள்நாடு

ஸ்தாபக விழாவும், பரிசளிப்பு நிகழ்வும்

தலைநகரில் கடந்த 43 ஆண்டுகளாககலை, இலக்கியப்பணியாற்றிவரும் புதிய அலை கலை வட்டம் தனது 44ஆம் ஆண்டில் கால் பதிக்கின்றமையை முன்னிட்டு நடைபெறவுள்ள ஸ்தாபக விழா வரும் 28ஆம் திகதி மாலை 4மணிக்கு கொழும்பு-14இல் அமைந்துள்ள சுகததாச ஸ்போர்ட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

மேற்படி நிகழ்வினில் பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகரும் புரவலர் புத்தகப் பூங்கா நிறுவனருமான புரவலர் ஹாசிம் உமர்
கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்தி வரும் கலை,கலாசாரப் போட்டியின் எவோட்ஸ்-2023 ஆம்
ஆண்டுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும்
நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *