உள்நாடு

இன்றும் நாளையும் நாடு முழுவதும் தட்டம்மை தடுப்பூசி திட்டம்

நாடு முழுவதும் தட்டம்மை (சின்ன முத்து) தடுப்பூசித் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று (20) மற்றும் நாளை (21) ஆகிய நாள்களில் 9 மாதக் குழந்தை முதல் 15 வயது வரையிலான சிறுவர்களுக்கு தட்டம்மைத் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.
தட்டம்மைத் தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட முடியும் என்றும் அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

– ஐ. ஏ. காதிர் கான் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *