உலகம்

ஈரானுக்கு பதிலடி கொடுத்த பாகிஸ்தான்..

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயங்கரவாதிகளை குறிவைத்து, அதன் மற்றொரு அண்டை நாடான ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. அனைத்து அண்டை நாடுகளுடனும் மோசமான உறவில் உள்ள பாகிஸ்தானுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 2 குழந்தைகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஈரானை கடுமையாக கண்டித்த பாகிஸ்தான் எச்சரிக்கையும் விடுத்தது

இந்நிலையில், ஈரானில் புரட்சிப்படையினரை மறைவிடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதேநேரத்தில், 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர் என ஈரான் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *