உலகம்உள்நாடு

விஜயகாந்தின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் தெரிவித்த ஹக்கீம் எம்.பி

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சமீபத்தில் உடல் நலக்குறைவால் காலமானார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று (17.01.2024) புதன்கிழமை காலை, நேரில் சென்று மறைந்த விஜயகாந்தின் மனைவியும் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த்தை சந்தித்து ஆறுதல் கூறியதோடு அவர் செய்த தியாகம் மற்றும் பல்வேறு பணிகளை குறித்து நினைவூகூர்ந்து பேசினார்.

இதன்போது அவருடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, திருச்சி எம் கே. ஷாகுல் ஹமீது மற்றும் பலர் உடன் இருந்தார்கள்.

படங்கள்- திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *