உள்நாடு

தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்..

சீரற்ற காலநிலை காரணமாக இன்று (10.01.2024) புதன்கிழமை முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் உள்ள அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள அச்சுறுத்தலை கருத்தில்கொண்டு இன்று முதல் தென்கிழக்கு பல்கலைக்கழக (SEUSL) ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.ஐ நௌபர் தெரிவித்தார்.

தற்போதைய காலநிலை முன்னறிவிப்புகளால் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துகளை கவனமாக ஆராய்ந்த பிறகு பல்கலைக்கழகத்தின் மூத்த ஆலோசனைக் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதேவேளை சம்மாந்துறை வளாகத்தின் பிரயோக விஞ்ஞான பீட கல்வி நடவடிக்கைகள் வழமை போன்று செயற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலுவில் வளாகத்தில் விடுதிகளில் தங்கியுள்ள அனைத்து மாணவர்களும் தங்களது பாதுகாப்பு கருதி இன்று பிற்பகல் 05:00 குள் வெளியேறிவிட வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளனர்.

 

(ஒலுவில் நிருபர் அமீர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *